1.என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும் போது இளிச்சவாய தான்.
2.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
3. நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
4.கணவன்: வாஷிங் மெஷின் வாங்கலாமா... ஃப்ரிட்ஜ் வாங்கலாமா?மனைவி: உங்களுக்கு எது முதல்ல தேவையோ அதை வாங்கிக்கோங்க
5.அம்மணி: என்னப்பா... வழக்கத்தை விட இன்னைக்கு பால் ரொம்ப தண்ணியா இருக்கு.பால்காரன்: வரும்போது நல்ல மழை. வீணாக்கக் கூடாதேன்னு பால் கேனிலேயே மழை நீரை சேமிச்சிட்டேன். அதான்...
6.விளம்பர நிறுவன அதிகாரி : மேடம், நாங்க சோப்புக் கம்பெனியிலிருந்து வர்றோம். நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?"இல்லத்தரசி : "என் கணவரை!"
7.ஆசிரியர் : A=b , B=c அதனால் A=c இதே மாதிரி ஒரு உதாரணம் சொல்லுங்க
மாணவன் : நான் டீச்சரை விரும்புறேன் டீச்சர் அவர் மகளை விரும்புறார் அதனால் நான் டீச்சர் மகளை விரும்புகிறேன்
8.ஆசிரியர் : ஏன் பக்கத்துல இருக்கிற பொண்ணு விரல கடிச்ச
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க :லேடீஸ் ஃபிங்கர்" சாப்பிட்டா ஞாபகசக்தி கூடும்னு
9. சுரேஷ் : என் மனைவி மெகா சீரியல்ல நடிக்கிறாங்க.
ரமேஷ் : அப்படின்னா, டி.வி.யிலயும் வந்து உங்களைப் படுத்துறாங்கன்னு சொல்லுங்க
10. நிருபர் : திடீரென நீங்க ஏன்திருமணம் பண்ணிக்கிட்டீங்க?''
நடிகை : ''என் மகன் அப்பாவேணும். அப்பா வேணும்னு நச்சரிக்கிறான், அதான்.'
11.''ஒரே தலைவலியா இருக்குதுங்க!''''மாத்திரையை போட்டுக்கம்மா...''''மாத்திரையை போட்டுகிட்டா,ஊர்லயிருந்து வந்திருக்கிற உங்கம்மா போயிடுவாங்களா?
12.நிருபர்: நீங்க சோப் போட்டு குளிப்பீங்களா? அல்லது ஷாம்பூ
போட்டு குளிப்பீங்களா ?
நடிகை: நான் கதவை தாப்பா போட்டுக் குளிப்பேன்
13. நண்பன்1: உங்க மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை
வந்தா நீங்க யார் பக்கம் நிப்பீங்க ?
நண்பன்2: எங்க வீட்டு பீரோக்கு பின்னாடி நிப்பேன்
14.சுரேஷ் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்ட்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
தொடரும்...........
Sunday, July 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment